Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்க தயார்”… விஜய் சேதுபதி அதிரடி..‌.. ஆவலில் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

இது எங்களின் உரிமை.. “மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை”… சீனியாவுக்கு இந்தியா தக்க பதிலடி…!!!!!!

உத்தரகாண்டில் உள்ள இந்திய சீன எல்லை கட்டுப்பாடு கோடு  அருகே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் சீனா இடையேயான தேர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா, சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசியபோது, தற்போது நடைபெற்று வரும் ராணுவ பயிற்சிக்கும் ஒப்பந்தத்திற்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை. மேலும் இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ பயிற்சி நடத்துகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த  தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையம் அருகே காய்கறி வியாபாரம்…. போலீசாரின் அதிர்ச்சி செயலால் 2 கால்களையும் இழந்த வாலிபர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெய்லர்” படத்தின் இயக்குனர் எங்கே போயிருக்காரு தெரியுமா….? வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் “ஜெய்லர்” படத்தின் படப்பிடிப்பு 50 %  நிறைவடைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பு தரவில்லை. இதனை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை இயக்குனர் நெல்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுடன் இருந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
பல்சுவை மருத்துவம்

இதய நோய்களை ஒழித்துக் கட்டும் பச்சை ஆப்பிள்..!!!!

இதய நோய்களை ஒழித்துக் கட்டும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. இது மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம்…. அமெரிக்க தூதர் பாராட்டு…!!!!!

அமெரிக்க தூதரான  எலிசபெத் ஜோன்ஸ் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு  பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா தற்போது தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்க்கு  எனது பாராட்டுகள். கொரோனா தொற்றுக்கு மத்தியிலும்  77 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களுடன் இந்தியா உலக அளவில் ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்திய ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் பெரும் மதிப்பை பெற்றுள்ளதாக” கூறியுள்ளார்.

Categories
அழகுக்குறிப்பு பல்சுவை லைப் ஸ்டைல்

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது.! தோல் சுருக்கம் இல்லாமல் இருக்க டிப்ஸ்..!!!

அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும் மற்றும் அதனை தவிர்க்கும் வழிகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தூசி மற்றும் மாசு மூலம் சருமத்தின் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை கடலை மாவு, சில துளிகள் எழும்பிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்து கழுவி வந்தால் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் ஆடம்பரம் மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு… முதன்மை நகரங்கள் எது தெரியுமா…??

ஏகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கை செலவு கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் உலக அளவில் இருக்கும் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மக்கள் வசிப்பதற்கு ஆடம்பரம் மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உணவு, ஆடைகள், போக்குவரத்து, வீடு போன்ற 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் பற்றி ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் தினம்”… விருது வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!!!

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் தமிழக அரசுக்கு விருது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் பயங்கர விபத்து….. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படபிடிப்பின் […]

Categories
மாநில செய்திகள்

மசூதிக்குள் நுழைந்த பயங்கராவாதிகள்… முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்.. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!!!

ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு  […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]

Categories
விளையாட்டு

கால்பந்து மைதானத்தில் வீரர்கள் வாய் கொப்பளித்து துப்புவது ஆரோக்கியமான செயலாம்…. வியப்பூட்டும் உண்மை தகவல் இதோ….!!!!

FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் போட்டியை கண்டுகழித்து வருகிறார்கள். அதன் பிறகு இந்த கால்பந்து போட்டிகளின் இடையே வீரர்கள் வாய் கொப்பளித்து மைதானத்திலேயே துப்புகிறார்கள். சக வீரர்கள் விளையாடும் இடம் என்று கூட பாராமல் கொப்பளித்து துப்பும் இந்த வீரர்களின் நடவடிக்கை தவறான நடத்தை என்றும் நீங்கள் யோசிக்கலாம். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கால்பந்து வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கு இடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் வாரேன்..” முதல் ஆளாக அறிவித்த மம்தா..! மோடி மகிழ்ச்சி… ஸ்டாலின் உற்சாகம்..!!!

ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

வருகிறது கனமழை!… 8 மாவட்ட மக்களே நீங்க பாதுகாப்பா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தை படம் பிடித்த செயற்கைக்கோள்…. குழந்தையாகிப்போன பிரதமர் மோடி….!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ் 06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது. இதில் இஓஎஸ் 06 என்பது ஓசன் சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையை சார்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1117 கிலோ எடை கொண்டதாகும். இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கு வதற்காக அனுப்பப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டு விழாவில் கலக்கலான இன்னிசை…. கனிமொழி எம்பி, அமைச்சர் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான‌ கழத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலக்கலான இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த பார்சல்…. உள்ளே இருந்த கண்கள்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களில் மிருகங்களுடைய கண்கள் வைத்து அனுப்பப்பட்ட பார்சல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 10 மாதங்களாக ரஷ்யா தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பிலும் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் மிருகங்களின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் பார்சல் வந்திருக்கிறது. அதன்படி மாட்டிரிட்டில் இருக்கும் உக்ரைன் தூதரகத்திற்கு அந்த பார்சல் நேற்று வந்திருக்கிறது. அதன்பிறகு, காவல்துறையினர் அந்த தூதரகத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாள் டைம்… 4 மணி நேர பேச்சு…! நேரடியா இறங்கிய வேலுமணி… ADMKவை கடுப்பாக்கிய கோவை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரர்..!!!

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பான் காரரின் வீடியோ வைரலாகி வருகின்றது. விஜய் நடிப்பில் பொங்களுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்ததோடு சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றது. நம்ம ஊர் மக்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வைப் செய்ய வைத்துள்ளது ரஞ்சிதமே பாடல். அண்மையில் ஜப்பானிய நடன கலைஞர் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இரண்டு லட்சத்திற்கும் மேல் பாலோவர்களைக் கொண்ட நடன கலைஞர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சேலையில கூட இப்படியா வரணும்?….. நடிகை பூஜா ஹெக்டே பங்கேற்ற விழா…. வெளியான வீடியோ….!!!!

நடிகை பூஜாஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் இவர் தெலுங்கில் நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்களும் பிளாப் ஆனது. இதன் காரணமாக அவர் அடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருக்கிறார். ரோஹித் ஷெட்டி அப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த விழாவிற்கு பூஜாஹெக்டே ரெட் கலர் சேலையில் வந்துள்ளார். சேலை என்றாலும் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. புதுசா வாங்கிய சொகுசு கார் முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்…. வைரல் புகைப்படம்….!!!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

புது பொலிவுடன் மீண்டும் “பாபா”… டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்…!!!!

புது பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?…. பத்ருதீன் அஜ்மல் சர்ச்சை கருத்து…..!!!!

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், அசாம் அரசியல்வாதியும் ஆன பத்ருதீன் அஜ்மல் புது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்துக்கள் முஸ்லீம் பார்முலாவை ஏற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறியுள்ளார். முஸ்லீம் ஆண்கள் 20-22 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். அதேபோல் முஸ்லீம் பெண்களும் 18 வயதில் திருமணம் செய்கின்றனர். ஆனால் 40 வயதிற்கு பின் பெற்றோரின் அழுத்தத்தால் திருமணம் செய்து கொள்பவர்கள், பின் எப்படி குழந்தைகளைப் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு…. மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு…. கோர்ட் அதிரடி….!!!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்”…. சான்றோர் வாக்குகேற்ப சிறைகளில் நூலகம்…. கோர்ட் கேள்வி….!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகா. இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 135 மத்திய சிறைகள் இருக்கிறது. அதன் பிறகு பெண்களுக்காக 3 சிறப்பு சிறைகளும், பெண்களுக்காக 10 துணை சிறப்பு சிறைகளும், 103 துணை சிறைகளும், 7 சிறப்பு துணை சிறைகளும் இருக்கிறது. இதில் பெரும்பாலான சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு வெளிச்சமின்மை மற்றும் காற்றோட்டம் இன்றியும் இருக்கிறது. அதன் பிறகு சிறை கைதிகளுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுத்த C.M… மக்கள் நடக்கவே முடியல…! புலம்பிய மாஜி அமைச்சர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… தன்னைப் போன்று இருந்த பெண்ணை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய இளம் பெண்…. பகீர் சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹேமா சவுத்ரி (27) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஹேமா அஜய் தாகூர் (27) என்ற வாலிபருடன் கடைசியாக பைக்கில் சென்றது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீரென ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கம்பி…. பயணியின் கழுத்தில் சட்டென பாய்ந்ததால் பரபரப்பு….!!!!!

டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் பயங்கர குண்டு வெடிப்பு…. 2 பேர் பலி…. பரபரப்பு….!!!!!

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பெண் youtube-ருக்கு பாலியல் தொல்லை…. இந்திய இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தென் கொரியா நாட்டில்  ஹயோஜியோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு 11:30 மணி அளவில் பெண் youtube ஒருவர் வீடியோ எடுத்து அதை லைவில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண் யூட்யூபருக்கு பாலியல் தொல்லை கொடுக்க, அந்த பெண் அங்கிருந்து நைசாக நழுவி செல்கிறார். இந்த சம்பவம் லைவில் வெளியானதால் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த மொபின் சந்த் முகமது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் இலவச வீட்டு வசதி திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் எந்த ஒரு ஏழை மக்களும் வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மானியம் வழங்குகிறது. இந்த வீடு கட்டுவதற்காக 2.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதில் ஒரு லட்சத்தை மாநில அரசும், 1.50 லட்சத்தை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால் உங்கள் பெயரை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ.‌ 7 முதலீடு செய்தால் போதும்”…. மாதம் ரூ. 5,000 கிடைக்கும்…. உங்களுக்கான அருமையான பென்ஷன் திட்டம் இதோ…..!!!!!

இந்தியாவில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நிலையான வருமானத்தை பெற விரும்புபவர் களுக்காக மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு அடல் யோஜனா பென்சன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு – ஓபிஎஸ் அறிவிப்பு..!!

கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக  அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை அக்னி வீரர்களில் பெண் மாலுமிகள்…. எத்தனை பேர் தெரியுமா?…. தலைமை தளபதி ஹரிகுமார் தகவல்….!!!!

இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய  […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா நிலைமை தான் உனக்கும்”…. மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை….!!!!!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை  மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மராட்டியம் துலே பகுதியைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்க சேந்தாலும் அவங்கள மட்டும் சேர்க்கவே மாட்டோம்”…. மல்லுக்கட்டும் டிடிவி, சசிகலா…. மோதலுக்கு என்ன காரணம்….???

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இவர்களை பாஜக இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஆளுநர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ அழைத்து பாஜக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவு,ம் இபிஎஸ் மட்டும் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..! கிண்டலாக பதிவிட்ட பொன்னி நதி பாடலாசிரியர்..!!!

சங்கர் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதுவதாக தகவல் வெளியானதற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கருப்பு நிறத்தில் வந்த தண்ணீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார் மேலும் வீட்டு உபயோகித்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்ததால் சீனிவாசன் கிணற்று தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று மோட்டாரை இயக்கி கிணற்றுத் தண்ணீரை எடுத்த போது கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை துடித்துடிக்க கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…..!!!!

உத்தரபிரதேசம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வந்த பயல் பாஹ்தியின்(22) பெற்றோர் சென்ற மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். ஏனெனில் தன் உறவினராக சுனில் என்பவரிடமிருந்து பயலின் பெற்றோர் ரூபாய்.5 லட்சம் கடன் வாங்கியிருந்தனர். கடனை திருப்பி தரும்மாறு பயலின் பெற்றோரிடமும் சுனில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோல் பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளனர். இதையடுத்து கடன் தொல்லையால் பயலின் பெற்றோர் மே மாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்சல்ட் செய்த கௌதம் கார்த்திக்… புலம்பும் கார்த்திக்… என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே…!!!

மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கந்துவட்டி வசூலா…? பேரூராட்சி துணை தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்…. துணிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குழித்துறை வாவுபலி திடல் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், மற்றொருவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் இணைந்து 300 கிராம் போதை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களான சின்னதுரை, வடிவேல் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காவல்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை சின்னதுரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே நிலக்கரி லோடு […]

Categories
உலக செய்திகள்

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விளையாட்டு வீரர்…. 1 லட்சம் அபராதம்…!!!

சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி  தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்….. “சித்தர்” என கூறி பணம் வசூலித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்வேதாவின் காதலர் இவர்தான்… திருமண தேதியுடன் வெளியிட்ட புகைப்படம்?… இன்ப அதிர்ச்சியில் ரசிகாஸ்..!!!

தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் […]

Categories

Tech |