Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மகள்கள்… தந்தை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சரவணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் கந்தசாமி தனது மகனின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் மகள்கள் தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து  அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கந்தசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |