Categories
உலக செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகை மரணம்…. தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பெரி வீட்டில் தூங்கிய நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் 1984 ஆம் வருடத்திலிருந்து 1996 ஆம் வருடம் வரை ஒளிபரப்பு செய்யப்பட்ட மர்டர் ஷி ரைட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த ஏஞ்சலா மிக பெரிய அளவில் புகழ்பெற்றார். தற்போது 97 வயதான நிலையில், வயது முதிர்வு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் தூங்கி நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

அவரின் பிறந்த நாள் இன்னும் ஐந்து நாட்களில் வரவிருக்கும் நிலையில், திடீரென்று அவர் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த இவர் ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |