Categories
தேசிய செய்திகள்

சீனாவிடம் இருந்து பெறப்படும் 1.1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர்கள் ரத்து: ஹரியானா அதிரடி..!

2 சீன நிறுவனங்களிடமிருந்து சுமார் 1.1 லட்சம் சோதனை கருவிகளுக்கான ஆர்டர்களை ரத்து செய்துள்ளோம் என ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டரிய பயண்படுத்தப்படும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன.

இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்த கிட்கள் தவறான முடிவுகளை தெரிவிக்கிறது என்று மாநில அமைச்சர் புகார் அளித்திருந்தார்.

இந்த முடிவில் நம்பகத்தன்மை வெறும் 5.4% மட்டுமே உள்ளது எனவும், சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பயப்படுத்தப்போவதில்லை எனவும் ராஜஸ்தான் அரசு முடிவெடுத்தது. இதனை தொடர்ந்து அதிவிரைவு கருவிகளை கொரோனா தொற்று கண்டறிய 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

இந்த நிலையில், சீனாவிடம் இருந்து 1.1 லட்சம் கருவிகள் வாங்க கொடுக்கப்பட்ட ஆர்டரை ஹரியானா மாநிலம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர், ” தென் கொரியாவிலிருந்து 1 லட்சம் கிட்டுகளுக்கு நாங்கள் புதிய ஆர்டர்களை செய்துள்ளோம். அதில் தற்போது 25,000 கிட்கள் வந்துள்ளன. இந்த கருவிகளின் விலை சீன கருவிகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு என தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரியானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் இரட்டிப்பு விகிதம் 14 நாட்கள் ஆகும். இது தேசிய அளவில் பதிவாகியுள்ள 7.5 நாட்களை விட குறைவு. அதேபோல, இது இந்தியா முழுவதும் உள்ள 16% மீட்பு விகிதத்தில் , ஹரியானாவில் மட்டும் மீட்பு விகிதம் 57% ஆக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |