Categories
உலக செய்திகள்

403 வருடம்…! ”கல்லா கட்டிய தொழிற்சாலை” மூட வைத்த கொரோனா …..!!

கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து 403 ஆண்டுகள் மூடப்படாத மதுபான தொழிற்சாலை மூடப்படுகிறது 

சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரை பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக ஜெர்மனியில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்கு மட்டும் 1.43 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன் எதிரொலியாக 403 ஆண்டுகள் இயங்கிவந்த வெர்நெக்  மதுபான தொழிற்சாலை முதல்முறையாக மூடப்படுகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை மக்கள் பொதுவெளியில் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெர்நெக் மதுபான நிறுவனத்தின் மேலாளர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Categories

Tech |