ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கமணி பேசி அதிர்ச்சியை கிளப்பினார். எடப்பாடியோடு இணைந்து செல்வதற்கு ஓபிஎஸ்சை தடுப்பது வைத்தியலிங்கமும் அவரோடு இருக்கும் மனோஜ் பாண்டியன் ஜேசிபி பிரபாகர் போன்றவர்கள் தான் என்று குண்டே தூங்கி போட்டுள்ளார். அந்த அதிர்ச்சி குறைவதற்குள் ஓபிஎஸ் முகாமிலிருந்து ஜிஎஸ்டி பிரபாகர் எதிர்த்தரப்பை நோக்கி ஒரு ஏவுகணை தாக்குதல் தொடுத்தார். “வழக்கில் சிக்கிவிடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசி உண்மைகள், யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருந்தார்கள், யார் திமுக சாதமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.
இதனையடுத்து நவம்பர் 21ஆம் தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளி கொண்டுவரப்படும். மேலும் ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41,000 கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்ட வெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும் என்று ஜெயஸ்ரீ பிரபாகர் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதற்கிடையில் வருகின்ற திங்கள்கிழமை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்துகிறார். அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று விவாதிக்க உள்ளனர். ஜேசிபி பிரபாகரும் ஓபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக கூறியுள்ளார். போட்டி பொதுக்குழுவை கூட்டும் முடிவும் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் 100% இணைய வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இருதரப்பும் மாறி மாறி வசைமாரி பொழியும் நிலையில் அதிமுக தொண்டர்கள் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்து விட்டதாக கூறுகிறது. இந்நிலையில் உண்மைய சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் என்று சொல்லுவாங்க இந்த இரண்டு தெய்வமும் மாறி மாறி உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கு என்று வடிவேலும் காமெடி வசனத்திற்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார்கள் இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பினர்கள்.