Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணிக்கு செல்லும் மற்றொரு முக்கிய புள்ளி……. அடுத்தடுத்த ஷாக்கில் EPS…..!!!!

அதிமுக ஒற்றை தலைமை யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தமக்கு தான் வெற்றி என்பதை ஒபிஸ் தரப்புக்கு சொல்லக்கூடிய வகையில் கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு, கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு மனுக்களை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு நாம் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற நம்பிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். இந்த நம்பிக்கையுடன் சி.வி சண்முகம் உள்ளிட்ட தமது சகாக்களுடன் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே ஓபிஎஸ் அன்கோவை இனி கட்சியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ரீதியில் இபிஎஸ் பேசி உள்ளார். அவரது இந்த பேச்சை ரசிக்காத அமித் ஷா, தேர்தல் வருகிறது கட்சியினர் ஒன்றாக ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் இணைந்து பணியாற்றுங்கள் என்று கறராக சொல்லி அனுப்பி விட்டாராம்.

இதனால் இபிஎஸ் ஏமாற்றுத்துடன் தமிழகம் திரும்பினாலும், அதிமுகவிற்கு எதிராக செயல்பாடுபவர்களை இனி கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஒரு கட்சி விவகத்தில் இன்னொரு கட்சி தலையிட முடியாது என்று தமது சொந்த ஊரான எடப்பாடியில் சமிபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ்க்கும், பாஜகவுக்கும் ஸ்ட்ராங்க் மெசேஜை கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இபிஎஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் 90% மேற்பட்டவர்கள் தான் பக்கம் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் அப்படி பேசி இருக்க, அவரது தைரியத்தை அசைத்துப் பார்க்கும்படியான சம்பவங்கள் சில நாட்களாக அரங்கேறி வருகிறது. நீண்ட நாட்களாக ஓபிஎஸ் அணியில் இருந்து விட்டு கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு ஒரு நாளைக்கு முன் வந்த மைத்ரேயன் தற்போது மீண்டும் ஓபிஎஸ் அணியிலேயே ஐக்கியமாகியுள்ளார். மேலும் அவர் அதிமுகவை வழிநடத்து திறமை ஓபிஎஸ் மட்டுமே இருக்கிறது என்று ஒரே போடாக போட்டது மட்டுமில்லாமல் பாஜக மேலிடத்தில் எடப்பாடிக்கு சாதகமான சூழல் இல்லை எனவும் அவரது ஆதரவுகளின் காது வேறு கடித்துவிட்டு சென்றுள்ளார். இதனால் இபிஎஸ் அணையில் குழப்பம் நிலவி வருகின்ற சூழலில் அந்த அணியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் அணையில் சேர உள்ளார் என்ற தகவல் இபிஎஸ் கூடாரத்தில் புயரலை கிளப்பி உள்ளது.

இபிஎஸ் அணியில் இருக்கும் சி.வி.சண்முகம் உடனான ஈகோ பிரச்சனை, இடைக்கால பொதுச் செயலாளரான பிறகு தலைமை கழகத்திற்கு இபிஎஸ் வந்த போது அவருக்கு இணையாக இருக்கை போடப்படாதது, சி.வி. சண்முகத்தை அழைத்துக் கொண்டு இபிஎஸ் டெல்லி சென்றது என அணியில் தமது முக்கியத்துவம் குறைந்து வருவதாக தமக்கு நெருக்கமான சில இடத்தை கே.பி.முனுசாமி குறைபட்டு கொண்டுள்ளார். இதன் விளைவாகவே சில தினங்கள் இபிஎஸ் தலைமையில் நடைபெற்று அதிமுகஸமாவட்ட செயலாளர் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லையாம். எனவே கூடிய விரைவில் ஓபிஎஸ் பக்கம் செல்லலாம் என்ற தகவல் தமிழக அரசியல் பரவி வருகிறது. மைத்ரேயன் கொடுத்துள்ள சிக்னலை அடுத்து கே‌பி.முனுசாமி, பொன்னையன், எம்.சி.சம்பத் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இபிஎஸ் தரப்பு மூத்த நிர்வாகிகள் விரைவில் ஓபிஎஸிடம் ஐக்கியமாக அதிக வாய்ப்பு உள்ளது. பொதுக்குழு தொடர்பான வழக்கிலும் ஓபிஎஸ் சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில் அதிமுக ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் கீழ் வரும் என்று நம்பிக்கையுடன் அவரின் ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் கூறுகிறார். ஆனால் காய்ச்சல் காரணமாகவே தான் ஓரிரு வாரங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவ்வபோது அணி மாறு அளவுக்கு தான் ஒன்றும் தரம் தாழ்ந்து போய்விடவில்லை என்று காட்டமாக கே.பி. முனுசாமி கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் அணிக்கு தான் போகவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Categories

Tech |