Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி…. குடும்பமாக திரண்டு வந்தாங்க…. விளையாடி மகிழ்ந்த சிறுவர்- சிறுமிகள்….!!

ஊரடங்கும் தளர்வுகளை மீறி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும்  பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. எனவே தற்போது ஊரடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தொடங்கி இருக்கின்றனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இவ்வாறு உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரும்பாலானோர் திரண்டு வருகின்றனர்.

இங்கு காலையில் சூரியன் உதிப்பதை காண்பதற்காக பெரும்பாலானோர் கடற்கரையில் குவிந்து இருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து மாலை வேளையில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின் கடற்கரையில் பயணிகள் ஒன்றாக அமர்ந்திருந்து ரசி த்தனர். இதனால் கடலோர பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு பொதுமக்களின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் டீ கடைகள், ஓட்டல்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்கும் கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது. இதேபோன்று நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி ஞாயிற்றுக் கிழமையான நேற்று பூங்காவில் பெரும்பாலான குடும்பத்துடன் திரண்டு வந்தனர். அதன்பின் பூங்காவில் சிறுவர்- சிறுமிகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் போன்ற உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோன்று பூங்காவிற்கு வந்த பெரும்பாலான இளம்பெண்கள் தங்களது தோழிகளுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். மேலும் புதுமண தம்பதியினரும் பூங்காவிற்கு வந்து கண்டுகளித்தனர். ஆகவே வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டு குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் பூங்காவில் நீண்ட நேரம் பொழுதை கழித்தனர். இதுபோன்ற மாத்தூர் தொட்டி பாலம், சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Categories

Tech |