Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது தேவையில்லாத வேலை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த இரண்டு கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பிளைவுட் மற்றும் மளிகை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |