Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகள்.. கனடா மாகாணம் அறிவிப்பு..!!

கனடாவிலுள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து கொரோனா விதிமுறைகளில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வரும் புதன் கிழமையிலிருந்து வெளியிடங்களில் 25 நபர்களும் கட்டிடங்களுக்குள் 5 நபர்களும் செல்லலாம். உணவகங்களில் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் உணவு உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் 50% மக்கள் செல்லலாம்.

ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படவுள்ளது. முடித்திருத்தம் செய்யும் கடைகளில் முக கவசம் அணிந்து கொண்டு 20% வாடிக்கையாளர்கள் செல்லலாம். நூலகங்களில் 20% நபர்களுக்கு அனுமதி. இறுதி சடங்குகள், மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகள், திருமணங்கள் போன்றவற்றிக்கு 25% மக்கள் செல்லலாம்.

உடற்பயிற்சி மையங்களில் 3 மீட்டர் சமூக இடைவெளியுடன் அனுமதியளிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் நெருங்காமல் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுத்திடல்கள், குதிரைப்பந்தயம் திரையரங்குகள், வாகன பந்தயங்கள் மற்றும் பொருட்காட்சி திடல்களுக்கு 25% நபர்கள்  அனுமதிக்கப்படுவார்கள்.

Categories

Tech |