நேபால் நாட்டிலுள்ள பெண்கள் மூன்று முறை திருமணம் செய்து கொள்வார்களாம். இது அவர்களது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான தான். அதுபற்றி இதில் காண்போம்.
நேபாள் நாட்டில் சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்கு குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண்கள் விளாம்பழத்தை திருமணம் செய்கிறார்கள். இந்த நிகழ்வு இஹி அல்லது விளாம் பழத்துடன் திருமணம் என்று அழைக்கப்படும். இது பருவம் அடைவதற்கு முன்பு முதல் வகை திருமணம். இது மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திருமணங்கள் நடக்கும். பருவம் அடைவதற்கு முன்பு 9 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சுபர்ணா குமாரி சிலையாக கருதப்படும் விளாம்பழத்தை திருமணம் செய்து பெற்றோர்கள் கன்யாதானம் செய்து தருவார்கள்.
இந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் குறைந்தது மூன்று முறையாவது திருமணம் செய்து கொள்வார்களாம். அதை அடுத்து “பகரா” முறையில் சூரியனை திருமணம் செய்து கொள்கின்றனர். இவை அனைத்தும் பருவம் அடைவதற்கு முன்பு நிகழ்த்தப்படும். இன்றும் இந்த சடங்கு நடைபெற்று வருகிறது. இறுதியாக மூன்றாவது முறை ஒரு ஆணை திருமணம் செய்து கொள்வார்கள். இன்றும் நடைமுறையில் இந்த பழக்கம் உள்ளது.
விஷ்ணு மற்றும் சூரிய கடவுளின் திருமணம் செய்து கொள்வதால் ஒரு புதுப் பெண் தனது கணவர் இறந்த பிறகும் ஒரு விதவையாக கருதப்படுவதில்லை என்று நம்பப்படுகிறது. இதனால் அச்சமூகத்தில் விதவைப் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.