ஆன்லைனில் காரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
பிரபல கார் நிறுவனமான ஹோண்டா ஷோரூம் விற்பனையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பொருட்டு ஆன்லைனில் விற்பனை தளம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் போகாமல் நேரடியாக ஆன்லைனில் கார்களை வாங்கி கொள்ள முடியும். இந்த நிறுவனத்தின் ஹோண்டா ஃப்ரம் ஹோம் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முதலில் அவர்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் டீலர்களை தேர்வு செய்து விட்டால் ஆன்லைனில் முன்பதிவு செய்து விடலாம்.
இதுகுறித்து ஹோண்டா நிறுவன இயக்குனரும் துணை தலைவருமான ராஜேஷ் கோயல் பேசுகையில் “வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஹோண்டா காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த புதிய முயற்சி கார் விற்பனையை சில்லறை அனுபவத்திலிருந்து டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாகும்” என கூறினார். ஹூண்டாய் மோட்டார் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட அதிகமான டீலர்ஷிப்களை தற்போது அறிமுகப்படுத்திய ஆன்லைன் விற்பனை தளத்துடன் ஒருங்கிணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.