Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏமாத்தி கூட்டிட்டு போயிருக்கான்… மீட்கப்பட்ட சிறுமி… மகளிர் காவல்துறையினரின் தீவிர செயல்…!!

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள பூதனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் அய்யப்பன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அயப்பன் வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர்.

இது பற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற அய்யப்பனை கைது செய்துள்ளனர். அதன்பின் சிறுமியை மீட்டு மகளிர் காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |