Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…. ஒரு நாள் போட்டியில்…. பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்….!!

பி.சி.சி.ஐ ஒரு நாள் போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றது. இதனை அடுத்து நாளை அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் ஐந்தாவது டி 20 போட்டி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி மார்ச் 23ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் பி.சி.சி.ஐ ஒருநாள் போட்டி தொடருக்கான 18 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்து இருக்கிறது.

இந்த ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஷிக்கர் தவான், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், யுஷ்வேந்திர சாஹால்,குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சி. நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர் போன்றோர் உள்ளனர்.

Categories

Tech |