வெந்தயக் கீரையில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம் .
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.
இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் தீரும்.
பத்து கிராம் வெந்தய கீரையை நெய்யில் வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும்.
தினசரி உணவில் வெந்தயக்கீரையை சேர்ப்பது உடலில் புரதக்குறைபாட்டை போக்கும். கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
வெந்தயக்கீரையில் நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும், கீரையில் உள்ள பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்ற பொருள் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
இந்த கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமாக்குகிறது.
வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து மோருடன் கலந்து குடித்துவர வயிற்றுப் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.