Categories
கொரோனா

ஓணத்திற்கு பின் தொற்று அதிகரித்ததாக மட்டுமே கூறினேன் – ஹர்ஷ்வர்தன்…!!

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே கூறியதாகவும், அம்மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளது என குறிப்பிட வில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் விளக்கமளித்துள்ளார்.

டெல்லியிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் நேற்று உரையாடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாகவும், ஓணம் பண்டிகையின்போது பொது முடக்கத்தில்  தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று  அதிகரித்ததாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கேகே. ஷைலஜா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே தான் கூறியதாக திரு ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்தார் என திருமதி கேகே. சைலஜா  குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளதாக குறிப்பிடவில்லை என ஹர்ஷவர்தன் தெரிவித்ததாகவும் திருமதி கேகே. சைலஜா குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |