தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
தற்போது மத்திய பிரதேசம், குஜராத், அசாம், உத்திரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி 28-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் கர்நாடகாவில் திரையரங்குகள், உணவகம் , திருமண நிகழ்ச்சிகளுக்கு 50% பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.