Categories
மாநில செய்திகள்

Omicron: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? சுகாதாரத்துறை தகவல்…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊரடங்கால் இரண்டு வருடங்கள் பட்ட கஷ்டங்கள் போதும். சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு மேலும் அமல்படுத்தும் சூழல் இல்லை. ஆனால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |