ராஜ குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் ஒரு அறையில் மர்மங்கள் உள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் பண்டிகையை பிரித்தானியா ராஜ குடும்பத்தினர் மிகவும் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை sandringham House என்னும் வீட்டில் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் இந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் பணியாளர்கள் செல்ல பயப்பட்டுள்ளனர். இதனால் மகாராணியார் பாதிரியார் ஒருவரை தனியாக அழைத்து வந்து பிரார்த்தனை செய்துள்ளார்.
மேலும் மன்னர் சார்லஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது உதவியாளர் ஒருவருடன் அந்த அறைக்குள் சென்று அங்கிருந்த ஓவியங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த அறையில் அவர்களை தவிர மற்றொருவர் இருப்பதை பார்த்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.