Categories
தேசிய செய்திகள்

OMG: நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை…. ஆச்சியின் கள்ளக்காதலன் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியில் ஜான் பினாய் டிக்குரூஸ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் எர்ணாகுளத்திலுள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கோடசேரி பகுதியைச் சேர்ந்த சிப்சி (52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிப்சி மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்சியின் மகன் சஜீவ் மற்றும் அவரது மனைவி டிக்ஸி (30) இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் டிக்ஸி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் அவர் தன் 2 குழந்தைகளையும் மாமியார் சிப்சியின் பெறுப்பில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் சிப்சியின் முறைதவரிய வாழ்கை முறையால் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். அந்த அடிப்படையில் நேற்று தனது கள்ளக்காதலன் ஜான் பினாய் டிக்குரூஸ் பொறுப்பில் அந்த 2 குழந்தைகளையும் சிப்சி ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது குழந்தை மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த  ஜான் பினாய் கழிவறையில் உள்ள பக்கெட்டில் நீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதன்பின் இத்தகவலை  சிப்சியிடம் தெரிவித்துள்ளார். இதனால் விரைந்து வந்த சிப்சி பின் குழந்தையை மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று மருத்துவர்கள் கேட்டதற்கு பால் குடிக்கும்போது குழந்தை மூச்சு திணறி இருக்கிறது என்று சிப்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் இறப்பு தொடர்பாக சிப்சியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்ததை சிப்சி ஒப்புக்கொண்டார். அதன்பின் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |