நடிகர் ரஜினி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்ட போது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினிக்காக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து இருக்கும் நிலையில் பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.