கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,675-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.72 காசுகள் உயர்ந்து, ரூ.53.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.