மரபு கவிஞரும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான கா.வேழவேந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 25-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை நூல்களை எழுதியுள்ள இவர் கலைமாமணி, சிறந்த எழுத்தாளர் விருதுகளை பெற்றுள்ளார்.
திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் மே முதல் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து அதை சட்டமாக்கினார். இவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.