Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

OMG: சூட்கேஸில் சடலம்…. அதிர்ச்சியில் காவல்துறையினர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையிலுள்ள பொள்ளிகளிபலயம் பிரிவு அருகே ஒரு சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர்..? உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |