Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவையின்  சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு…!!

மக்களவையின்  சபாநாயகராக பாஜக ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் புதிதாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் தலைமையிலான மத்திய அரசின் மக்களவை முதல் கூட்டம் 17_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மக்களவையின் முதல்நாளில் இடைக்கால சபாநாயகராக பாஜகவின் MP  வீரேந்திரகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து மோடி , ராஜ்நாத்சிங் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களுக்கு  இடைக்கால சபாநாயகர்  வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஓம் பிர்லா க்கான பட முடிவு

இரண்டாம் நாளான நேற்று மீதம் இருந்த புதிய உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களவை உறுப்பினர்கள் MP_யாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று 3 நாளாக நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை  அனைத்து கட்சிகளும் ஆதரித்ததையடுத்து அவர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து   மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

அதை தொடர்ந்து சபாநாயகராக ஓம் பிர்லா_வுக்கு திமுக ஆதரவு தெரிவித்து சபாநாயகராக நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு முன்மொழிந்தார். அதே போல ஓம் பிர்லா -வை  அதிமுக சார்பில் ஆதரித்து சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை அதிமுக சார்பில் ரவீந்திரநாத் முன்மொழிந்தார்.

Categories

Tech |