வெண்கல பதக்கத்துக்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து , சீன வீராங்கனை ஹி பி ஜியாவ்வை எதிர்கொள்கிறார்.
இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டண் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தற்போது நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான சீன தைபெ தாய் சு யிங்கிடம் 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து , சீன வீராங்கனை ஹி பி ஜியாவ்வை எதிர்கொள்கிறார். இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று பி.வி .சிந்து வெண்கலப் பதக்கத்தை வெல்வாரா ? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.