ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன வீரரிடம், இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார் .
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் நடத்த 3-வது சுற்றில் இந்திய வீரரான சரத் கமல், சீனாவை சேர்ந்த லாங் மா-வை எதிர்கொண்டார்.
இதில் பலம் வாய்ந்த சீன வீரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். இதில் 2-வது செட்டை கைப்பற்றிய சரத் கமல், அடுத்தடுத்த செட்களை இழந்தார் . இதனால் 7-11, 11-8 ,11-13, 4-11, 4-11 என 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.