டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வியடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் 3-வது சுற்றுக்கான போட்டியில் மணிகா பத்ரா, ஆஸ்திரியா வீராங்கனை சோபியா பொல்கானோவாவுடன் மோதினார்.
இதற்கு முன் நடந்த முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிக்கா இந்த சுற்றில் தவறவிட்டார். இதில் 8-11, 2-11, 5-11, 7-11 என தொடர்ந்து 4 கேம்களை இறந்த மணிக்கா பத்ரா தோல்வியை சந்தித்தார்.