டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் .
டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
இதில் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுக்கான போட்டி நடைபெறுகிறது.