டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-8 என்ற கணக்கில் பி.வி. சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன்பிறகு தை சூ-யிங் 21-18, 21-12 ஆதிக்கம் செலுத்தியாதல் 18-21 என்ற கணக்கில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
இதையடுத்த நடந்த 2-வது செட்டில் தொடக்கத்தில் இருந்தே தை சூ-யிங் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் இறுதியாக 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் பி.வி .சிந்து-வை தோற்கடித்த ,தை சூ-யிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். எனவே இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பி.வி .சிந்து நாளை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹிபிங்கை எதிர்கொள்கிறார்.