கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் சக்தி வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை அழகர் மலை என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசில் இருந்து வெளிவந்த தீப்பொறி அழகர் மலை மீது விழுந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அழகர்மலையை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அழகர்மலை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.