மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் பகுதியில் குழந்தைசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மானுருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிளானது மானூர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைசாமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டார்.
இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைசாமி பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மானூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.