Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ரூபா நகரில் ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலா ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜோசபின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோசப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |