கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சரவணன் என்பவர் ஓட்டி சென்ற கார் கணேசன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.