காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி பொன்னுசாமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பொன்னுசாமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஏரியில் பொன்னுசாமியின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொன்னுசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொன்னுசாமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசி சென்றனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.