Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் காட்சி… முதியவரின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் குட்செட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 10:45 மணி அளவில் வந்த முதியவர் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பிறகு அந்த முதியவரின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்  திருப்பூர் மாவட்டத்திலுள்ள எஸ். வி. காலனியில் வசித்து வரும் சண்முகம் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதோடு சண்முகம் தீராத வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து ரயில் நிலையத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |