Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கண் சரியாக தெரியாததால்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கண் பார்வை சரியாக தெரியாமல் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்ற மூதாட்டி கண் பார்வை சரியாக தெரியாததால் திடீரென அங்கிருந்த தவறிக் கீழே விழுந்து விட்டார்.

இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |