Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த கற்கள்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சுபைதா பேகம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபைதா பேகம் கொட்டாம்பட்டியில் வசிக்கும் தனது மூத்த மகனை பார்ப்பதற்காக இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுபைதா பேகம் வீட்டிற்கு மகனுடன் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதிகமான கற்கள் சாலையில் கிடந்த காரணத்தினால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விட்டது.

இதனால் சுபைதா பேகம் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் சுபைதா பேகமை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுபைதா பேகம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |