உடல்நிலை சரியில்லாததால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் மூதாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள் அவர் தீயில் கருகி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.