Categories
தேசிய செய்திகள்

அட!…. என்னப்பா இது…. 250 பெண்களை வரன் பார்க்க 14,000 இளைஞர்கள்….. ஆண்களுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்சனகிரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 14,000 ஆண்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்களில் 250 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14000 ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட நிலையில் 13,750 பேருக்கு மணமகள் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படமும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை இல்லை என்று தான் கூற வேண்டும் என்றும், ஆண்களுக்கு வந்த சோதனையா இது என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.

Categories

Tech |