நடிகர் எஸ். ஜே. சூர்யா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ். ஜே. சூர்யாவிற்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரை தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஒருவர் இவரை அணுகியுள்ளாராம். அந்த படத்தில் நடிக்க இவர் சம்பளமாக 7 கோடி கேட்டதாகவும், இதைக் கேட்ட அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.