டெல்லியில் உள்ள காசியாபாத்தில் முசோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,. ரயில்வே தண்டவாளத்தில் நின்று 3 பேரும் ரயில் வருவது கூட தெரியாமல் தீவிரமாக வீடியோ எடுத்துள்ளனர். அப்போது திடீரென வந்த ரயில் 3 பேரின் மீதும் பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்ததுள்ளனர். இது போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில், 3 பேரின் செல்போன்களும் உடைந்து கிடப்பதால் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.