Categories
மாநில செய்திகள்

ஓ!… அதுக்கு வரலையா..? அப்ப இதுக்காகத்தான் வருகிறாரா….? பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து வெளியான தகவல்…..!!!!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 1956-ம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புற கல்லூரியாக தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 1976-ம் ஆண்டு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இந்த பல்கலைக்கழகத்தை முனைவர் சி. ராமச்சந்திரன் மற்றும் முனைவர் டி.எசு. சௌந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்.

இந்த பல்கலைக்கழகமானது மகாத்மா காந்தியின் வேலை மற்றும் அறிவு தனித்தனியானவை அல்ல என்பதை கொள்கையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 1976-ம் ஆண்டு மத்திய அரசு நிக நிலை பல்கலைக்கழகமாக அறிவித்த நிலையில், மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகத் திகழ்வதோடு பல்கலைக்கழகம் மானிய குழுவில் இருந்து கல்லூரிக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் 11-ம் தேதி பட்டம் அளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக கூறப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |