விமானம் கடத்தப்பட்டது விட்டது என்று தவறாக தகவல் அனுப்பியதால் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கடந்த 8-ம் தேதி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது வழியில் என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க முயன்றார். விமானி தகவல் அனுப்ப 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக 7500 என்ற கோடினை அழுத்தினார். இந்த கோடானது விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதை குறிக்கும். விமானம் கடத்தப்பட்டது விட்டது என்ற தகவலால் நிலைய அதிகாரிகள் அனைவரும் பதறி போயினர்.
பின்னர் விமானம் கடத்தப்படவில்லை என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விமானி ரவிராஜூக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் தவறு குறித்து சரியாக விளக்கம் அளித்தார். இருப்பினும் விமானியின் விளக்கத்தில் திருப்தி அடையாத மத்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் விமானியை 3 மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது