Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள்… பொதுமக்கள் விடுத்த கோரிக்கை… நகராட்சியினர் அதிரடி நடவடிக்கை…!!

உழவர் சந்தை பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள காந்திஜி பூங்காவை அடுத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வதால் காலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக இருப்பது வழக்கம். இதனையடுத்து அப்பகுதியில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்தால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்யவேண்டும் என நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் உழவர் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துநகராட்சி சார்பில் முன்னதாகவே வியாபாரிகளுக்கு அறிவிப்பு செய்ததால் சிலர் தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். இருப்பினும் சில இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றியுள்ளனர்.

Categories

Tech |