Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு…. மளமளவென பற்றி எரிந்த ஆய்வகம்…. நர்சிங் கல்லூரியில் பரபரப்பு…!!

ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நர்சிங் கல்லூரியில் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி-யில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து அங்கு தீ மளமளவென எரிய ஆரம்பித்தால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீயானது அந்த ஆய்வகத்தின் உள்ளே தர்மாகோல் மூலம் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வேகமாக பரவி விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வண்ணார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏ.சியில் மின் கசிவு ஏற்பட்ட காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |