ஆகஸ்ட் 1 முதல் பேருந்து ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில்,
இதற்குமேல் ஊரடங்கு அமல்படுத்தமாட்டோம். இது தான் இறுதியான ஊரடங்கு என்று முதல்வர் பழனிசாமி சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறமிருக்க ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஆகஸ்ட் 1 முதல் பேருந்து, ரயில்கள் உள்ளிட்ட பயண சேவைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் பேருந்து, ரயில் போக்குவரத்து இயங்குவதற்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பொது போக்குவரத்திற்கு இன்னும் காலதாமதமாகும் எனவும், சீரான நிலைமை வந்த பின்பே பொதுப்போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.