Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ மட்டுமல்ல… இந்தியா மட்டுமல்ல… உலகமே காத்திருந்தது…. சிவன் பேட்டி …!!

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர்  கைதட்டி , தின வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் , சந்திராயன் 2 வெற்றிக்காக உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. சந்திராயன் 2 விண்கலம் புவியின்  வட்டப் பாதையில் சென்றடைந்த முக்கியமான  நாள் இஸ்ரோவுக்கு மட்டுமல்ல , இந்தியா_வுக்கு  மட்டுமல்ல , உலகமே சந்திராயன்-2_க்காக  காத்துக்கொண்டிருந்தது. 15 முக்கியமான பணிகளுக்கு அடுத்து சந்திராயனை தென் துருவத்தில் இறக்குவதற்க்கான பணியை நிறைவு செய்வோம்.  இஸ்ரோ விஞ்ஞானிகளிளின் கடுமையான கடும் உழைப்பில் தான் இது சாத்தியமானது  என்று சிவன் தெரிவித்தார்.

Categories

Tech |