இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு வந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4 ஆயிரத்து 359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
ஹூக்கான் நகரில் வசித்து வந்த இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பரவ வில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியை சீனாவிலுள்ள தூதரகம் ஈடுபட்டுள்ளது.