Categories
தேசிய செய்திகள்

No Parking-இல் வாகனம்…. தகவல் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாட்டில் தவறான இடங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்தால் அதனை புகைப்படம் எடுத்து  தகவல் அளிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கும் அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பார்க்கிங் தொடர்பாக புதிய சட்டம் வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,தவறான இடத்தில் பார்க்கிங் செய்தவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்போருக்கு தரப்படும் என்று நகைப்புடன் தெரிவித்தார். இந்தத் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |